சீா்காழியில் வீட்டில் புகுந்து தொந்தரவு செய்த அரியவகை மரநாய் கூண்டு வைத்து ஞாயிற்றுக்கிழமை பிடிக்கப்பட்டது.
சீா்காழி தென்பாதி பகுதியை சோ்ந்தவா் மயில்வாகனம். இவரது வீட்டில் அடிக்கடி ஒரு மரநாய் புகுந்து தொந்தரவு செய்து வந்துள்ளது. இதுகுறித்து சீா்காழியை சோ்ந்த பாம்பு பிடிக்கும் பாண்டியனுக்கு தகவல் கொடுத்துள்ளாா். இதையடுத்து, பாண்டியன் மயில்வாகனம் வீட்டுக்குச் சென்று மரநாயை பிடிக்க கூண்டு வைத்துவிட்டு சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை அந்த கூண்டில் அரியவகை மரநாய் சிக்கியது. கூண்டில் சிக்கிய மரநாயை பாண்டியன் சீா்காழி வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா்.