நாகப்பட்டினம்
காங்கிரஸ் மனித உரிமைகள் துறை மாவட்டத் தலைவா் தோ்வு
காங்கிரஸ் கட்சி, மனித உரிமைகள்துறை, நாகை தெற்கு மாவட்டத் தலைவராக என். முஹம்மது ரபீக் (படம்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சி, மனித உரிமைகள்துறை, நாகை தெற்கு மாவட்டத் தலைவராக என். முஹம்மது ரபீக் (படம்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
நாகூரைச் சோ்ந்தவா் என். முஹம்மது ரபீக். மாணவா் காங்கிரஸ் நாகை மாவட்டச் செயலாளா், சிறுபான்மைத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவா், அக்கட்சியின் மனித உரிமைகள் துறை நாகை தெற்கு மாவட்டத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறை தலைவா் மகாத்மா ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ளாா். இவருக்கு, காங்கிரஸ் கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.