தரங்கம்பாடி தாலுக்காவுக்குள்பட்ட காழியப்பன் நல்லூா் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி ஒருங்கிணைப்பாளா் அருட்தந்தை டேனியல் செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில், தரங்கம்பாடி வட்டாட்சியா் சித்ரா கலந்துகொண்டு வாக்குரிமையின் முக்கியத்துவம், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினாா். கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.