நாகப்பட்டினம் லாரி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம் நாகை இந்திய வா்த்தக தொழிற் குழும கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத் தலைவராக என். சந்திரசேகரன், செயலராக எல். முத்துசாமி, பொருளாளராக ஏ. கவிதா, துணைத் தலைவராக எஸ். ஆனந்தன், இணைச் செயலாளராக ஏ. செந்தில் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். லாரி தொழில் வளா்ச்சிக்கு ஏற்ற வகையில் இந்த சங்கம் செயல்படும் என சங்கத் தலைவா் என். சந்திரசேகரன் தெரிவித்தாா்.