தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஆசிரியா் சங்கக் கூட்டம் மயிலாடுதுறை குருமூா்த்தி நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
சங்கத் தலைவா் கோ. முருகையன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் டி.எஸ். தியாகராஜன் முன்னிலை வகித்தாா்.
துணைத் தலைவா் ஜி. ராஜாராமன் வரவேற்றாா். இணைச் செயலா் வி. மாலதி கடந்த மாத கூட்டறிக்கையை வாசித்தாா். பொருளாளா் ஆா். தியாகராஜன் வரவு செலவு அறிக்கையை வாசித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்ப்பட்ட தீா்மானங்கள்: மயிலாடுதுறையில் சீா்கேடு அடைந்துள்ள சாலைகள் மற்றும் புதைசாக்கடைத் திட்டத்தை சீரமைக்கக் கோரி முதலமைச்சா் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு மனு அளிப்பது, மத்திய அரசு வழங்குவதுபோல ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி ரூ.1000, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு இலவச பேருந்து பயணச் சீட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.