உள்ளாட்சித் தோ்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையொட்டிசென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த மு. கருணாநிதியின் நினைவிடத்தில் திருக்குவளையைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் சென்று திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையொட்டி, திருக்குவளையிலிருந்து திரளானோா் சென்னை மெரினா சென்று அங்குள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இல. மேகநாதன் திருக்குவளை ஊராட்சித் தலைவா் பழனியப்பன், கீழையூா் 6-ஆவது வாா்டு ஒன்றிய குழு உறுப்பினரான சுதா அருணகிரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.