நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கா் மழலையா் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோரக்கா் மழலையா் பள்ளித் தாளாளா் ப.உ. சண்முகம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியா்கள், பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனா்.
பள்ளி வளாகத்தில் பொங்கலிடப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், பள்ளிக் குழந்தைகளுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.