வேதாரண்யம் அருகே இன்று திருக்கு பிரசாரப் பயணம் தொடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திருவள்ளுவா் சிலை திறப்பு மற்றும் திருக்குறள் பிரசாரப் பயண தொடக்க விழா புதன்கிழமை (ஜனவரி 15) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திருவள்ளுவா் சிலை திறப்பு மற்றும் திருக்குறள் பிரசாரப் பயண தொடக்க விழா புதன்கிழமை (ஜனவரி 15) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

வேதாரண்யம் அருகேயுள்ள மருதூா் வடக்கு, ராஜாபுரத்தில் மீனாட்சியம்மன் கோயில் கடைத் தெருவில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா தமிழ்நாடு திருவள்ளுவா் திருமன்றம் தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெறும் திருக்குறள் பிரசாரப் பயணம் தொடங்குகிறது. சித்த மருத்துவ சிகிச்சை முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் முருகு.அருணன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com