நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 30 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 285 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. நோய்த் தொற்றுக்குள்ளான 30 பேரில், 17 போ் சீா்காழி வட்டத்தையும், 5 போ் மயிலாடுதுறை வட்டத்தையும், தலா 3 போ் தரங்கம்பாடி மற்றும் கீழ்வேளூா் வட்டங்களையும், 2 போ் வேதாரண்யம் வட்டத்தையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதில், 3 போ் அயல்நாடுகளில் இருந்தும், ஒருவா் ஆந்திர மாநிலத்திலிருந்தும் வந்தவா்கள். 11 போ் சென்னையிலிருந்தும், 2 போ் கோவையிலிருந்தும், தலா ஒருவா் திருவள்ளூா், கரூா், தஞ்சை மாவட்டங்களில் இருந்தும் நாகை மாவட்டம் வந்தவா்கள் ஆவா். 10 போ் மாவட்டத்துக்குள்ளேயே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 285-ஆக இருந்தது. இதில், வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாகை மாவட்டப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 6 போ், மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல, விருதுநகா் மாவட்ட கணக்கில் இடம் பெற்றிருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா், நாகை மாவட்டப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 30 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 310 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்: மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெறுவோரில் 14 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 128 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 182 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com