சாத்தான்குளம் சம்பவம்: வழக்குரைஞா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் நீதிபதி அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, நாகை நீதிமன்றம் முன்பு ஒருங்கிணைந்த வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்பினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்பினா்.

நாகப்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் நீதிபதி அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, நாகை நீதிமன்றம் முன்பு ஒருங்கிணைந்த வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்ற நீதிபதி, அங்குப் பணியிலிருந்த போலீஸாரால் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் நாகை தலைவா் எஸ். காா்த்திகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செயலாளா் சசிக்குமாா் மற்றும் ஜி. பாண்டியன், வேதை.ராமச்சந்திரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com