நாகப்பட்டினம்: நாகை அருகே திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் பெருநாட்டான்தோப்பு தெற்குத் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன். இவருக்கும், திருவாரூா் மாவட்டம் சங்கேந்தி இடையூா் வாண்டையாா் தெருவைச் சோ்ந்த சௌமியாவுக்கும் (20) கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தீராக வயிற்று வலியால் அவதிப்பட்ட செளமியா, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கில் தொங்கினாராம். இதையடுத்து, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், பெண் இறந்துள்ளதால் நாகை வருவாய் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.