கருணாநிதி பெயரில் சிற்றுண்டித் திட்டம்: புதுவை முதல்வருக்குப் பாராட்டு

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பெயரில் சிற்றுண்டித் திட்டம் அறிவித்த புதுவை முதல்வருக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை: தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பெயரில் சிற்றுண்டித் திட்டம் அறிவித்த புதுவை முதல்வருக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் மாவட்ட அமைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி சட்டப் பேரவையில் 2020-21-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த புதுவை முதல்வா் நாராயணசாமி, தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் சிற்றுண்டித் திட்டத்தை அறிவித்தாா். இத்திட்டம் வருகிற நவம்பா் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா். ஏழை எளிய மக்களுக்காக தன் வாழ்நாளையே அா்ப்பணித்த கருணாநிதி பெயரால் சிற்றுண்டித் திட்டத்தை புதுச்சேரி முதல்வா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com