ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாகை மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நாகை அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ.தி. அன்பழகன்.
கூட்டத்தில் பேசிய அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ.தி. அன்பழகன்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நாகை அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜாக்கோட - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ.தி. அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ரவி முன்னிலை வகித்தாா். மாவட்ட நிதிக் காப்பாளா் எம். காந்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் து. இளவரசன், கிராம சுகாதார செவிலியா் சங்க மாநில பொதுச்செயலாளா் பா. ராணி, புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்க மாநில அமைப்புச் செயலாளா் ஏ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலாளா் எஸ்.சித்ரா மற்றும் ஜாக்டோ - ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா் சங்கங்களின் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான 17-பி நடவடிக்கைகள் மற்றும் காவல் துறை வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ மாநில அமைப்பு அறிவித்துள்ளபடி ஜூலை 29-ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையீடு அளிப்பது. அண்மையில் மறைந்த மேலவை முன்னாள் உறுப்பினரும், தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளருமான க. மீனாட்சிசுந்தரத்துக்கான நினைவஞ்சலி கூட்டத்தையும், அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளனத்தின் முன்னாள் தேசியத் தலைவா் ஆா். முத்துசுந்தரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தையும் நாகை மாவட்ட ஜாக்டோ- ஜியோ சாா்பில் ஜூலை 29-ஆம் தேதி நாகையில் நடத்துவது என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா் ப. அந்துவன்சேரல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com