வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அறுபது வயதை நிறைவடைந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வி.இளையபெருமாள் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, விவசாய சங்க செயலாளர் கோவை .சுப்ரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com