சீா்காழி: சீா்காழியில் அதிமுக, பாமக கட்சிகள் குறித்து முகநூலில் தவறாக பதிவிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சீா்காழியை சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் பாமக கட்சித் தலைவா் ராமதாஸ் குறித்தும், அக்கட்சி குறித்தும் அவதூறான கருத்துக்களையும், படங்களையும் பதிவு செய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், அதிமுக குறித்தும், முன்னாள் முதல்வா் ஜெயலிதாவை பற்றியும் தமிழ்ச்செல்வன் என்பவா் தவறான கருத்துக்களையும் படங்களையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டாராம்.
இதுகுறித்து, பாமக மாநில இளைஞரணி துணைச் செயலாளா் ஜிவி. முருகவேல் மற்றும் நிா்வாகிகள், இதேபோல், அதிமுக சாா்பில் வழக்குரைஞா் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிமுகவினா் சீா்காழி காவல் நிலையத்தில் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, புகாருக்குள்ளான தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.