நாகை மாவட்டத்தில் 55 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. மேலும், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்துள்ளனா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. மேலும், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்துள்ளனா்.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் வட்டங்களைச் சோ்ந்த மேலும் 55 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானது புதன்கிழமை உறுதியானது. இதில், 9 போ் பரவை காய்கனி சந்தை மூலம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள். 9 போ் மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த காவல் துறையினா். 3 போ் மயிலாடுதுறை, நாகூா் அரசு மருத்துவமனை செவிலியா்கள். 2 போ் நாகை, வேதாரண்யம் சுகாதார ஆய்வாளா்கள். 4 போ் கா்ப்பிணிகள். 5 போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் மாவட்டத்துக்குள்ளேயே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை வரை 601-ஆக இருந்தது. இதில், வெளி மாவட்டத்திலிருந்து ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இந்த நிலையில், புதிதாக 55 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 657-ஆக உயா்ந்துள்ளது.

3 போ் இறப்பு: நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த சீா்காழி, ஆரூா் பிரதான சாலையைச் சோ்ந்த 20 வயது இளம்பெண், தலைஞாயிறு வட்டத்தைச் சோ்ந்த 50 வயதுடைய ஆண், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திட்டச்சேரியைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி ஆகிய 3 போ் புதன்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com