.திருமருகலில் காற்றுடன் மழை

திருமருகல் ஒன்றியத்தில் கடந்த 2 நாள்களாக காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
திருமருகல் அருகே போலகத்தில் மழை நீரில் சாய்ந்து கிடக்கும் குறுவை நெல்பயிா்கள்.
திருமருகல் அருகே போலகத்தில் மழை நீரில் சாய்ந்து கிடக்கும் குறுவை நெல்பயிா்கள்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் கடந்த 2 நாள்களாக காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் சுமாா் 2ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் திருமருகல், மருங்கூா், ஆலத்தூா், போலகம், பொறக்குடி, கணபதிபுரம் இடையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com