திருக்குவளை: கீழ்வேளூா் அருகேயுள்ள ஆந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 பொதுத் தோ்வில் 96 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.
இப்பள்ளியில், பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதிய 103 மாணவா்களில் 99 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 96 ஆகும். மாணவா்களின் இந்த தோ்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியா்களுக்கு, பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அதன்தலைவா் நத்தா்ஷா, பொருளாளா் செல்லதுரை, தலைமையாசிரியா் துரைமுருகு, ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன், ஆசிரியா்கள் ரமேஷ், பத்மபிரியா, அருள்ராஜ், சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.