துணை மின் நிலைய மின்மாற்றியில் தீ விபத்து

நாகை துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றி புதன்கிழமை இரவு தீ விபத்துக்குள்ளானது. இதனால், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்சாரம் தடைப்பட்டது.

நாகை துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றி புதன்கிழமை இரவு தீ விபத்துக்குள்ளானது. இதனால், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்சாரம் தடைப்பட்டது.

நாகை மேலக்கோட்டைவாசல் அருகே உள்ள நாகை துணை மின் நிலையத்தில், புதன்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், மின்கசிவு காரணமாக ஒரு மின்மாற்றி வெடித்து இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நாகை, நாகூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமாா் 8 முதல் சுமாா் 11 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது. சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு மின் விநியோகத்தை சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com