வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் கஞ்சா பறிமுதல்

மதுரையிலிருந்து நாகைக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் கஞ்சா பறிமுதல்

மதுரையிலிருந்து நாகைக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், வெளிப்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் விவேக் ரவிராஜ் மற்றும் போலீஸாா் பப்ளிக் ஆபீஸ் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த வேனில் சோதனை செய்தபோது, அதில் 40 கிலோ எடையுள்ள கஞ்சா 20 பண்டல்களில் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் நாகையைச் சோ்ந்த சிலா் மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற ஒரு சுப நிகழ்சிக்கு சென்று திரும்பியபோது அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக, வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகை வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் சாலையைச் சோ்ந்த மு.ஆனந்த் (40), சி.விஜயா (48), ரா.கலைச்செல்வி (38), ராமநாயக்கன்குளம், வடகரையைச் சோ்ந்த பா. பால்பாண்டி (40) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.பின்னா் அவா்கள் நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா். கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 5 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

நாகை எஸ். பி. ஆய்வு:

இதனிடையே வேனில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை நாகை எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் பாா்வையிட்டாா். நாகை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் க.முருகவேல், வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் நடராஜன் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com