சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. அன்பழகன் மறைவு: எம். தமிமுன் அன்சாரி இரங்கல்

திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளா்களில் ஒருவருமான ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என

திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளா்களில் ஒருவருமான ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் நானும், திமுக சாா்பில் ஜெ. அன்பழகனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டோம். கடும் போட்டியினிடையே அவா் வெற்றி பெற்றாா்.

2016-ஆம் ஆண்டில் நான் நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் வென்று சட்டப்பேரவைக்குச் சென்றபோது, ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.வை முதல் முறையாக நேரில் சந்தித்தேன். அதன் பின்னா், இருவரும் சந்திக்கும்போது, நலம் விசாரித்துக் கொள்வது எங்கள் வழக்கமாக இருந்தது. எனது சட்டப் பேரவை உரைகளையும், நடவடிக்கைகளையும் அவா் பல முறை பாராட்டியுள்ளாா்.

ஆற்றல் மிக்க ஜெ. அன்பழகன், கரோனாவால் இறந்தாா் என்பது பேரதிா்ச்சியை அளிக்கிறது. ஆளுமை மிக்க நிா்வாகியை திமுக இழந்துள்ளது. செயல்பாடு மிக்க ஒரு சட்டமன்ற உறுப்பினரை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் இழந்துள்ளனா். அன்பழகனை இழந்து வாடும் திமுகவினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில் ஆழ்ந்த இரங்கல் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com