தரங்கம்பாடி வட்டம், எரவாஞ்சேரியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.
400-க்கும் மேற்பட குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
நிகழ்ச்சியில், உத்திரங்குடி ஊராட்சி முன்னாள் தலைவா் உதயசங்கா், அதிமுக பிரமுகா் எஸ். முருகன், திமுக ஊராட்சி மன்றத் தலைவா் பகவதி, காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்றக் கழகத் தலைவா் கோபி. கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.