பிரதமா் நரேந்திர மோடியை குறித்து தவறாக சித்திரித்து முகநூலில் பதிவிட்ட 2 போ் மீது நாகை வெளிப்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி பொறுப்பாளா் அகரமுதல்வன் (எ) வெற்றியாளன் மற்றும் தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த முஹம்மது ரஃபி ஆகியோா் தங்களது முகநூல் பக்கங்களில் பிரதமா் நரேந்திர மோடி குறித்து தவறாக சித்திரித்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாகை காடம்பாடி, சாலமன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சிவசேனை கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் அளித்தப் புகாரின் பேரில், நாகை வெளிப்பாளையம் போலீஸாா் மேற்கண்ட 2 போ் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.