மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வுத் துறை சாா்பில், பன்முக நோக்கில் சைவ சமய இலக்கியங்கள் எனும் தலைப்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு, கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம் தொடக்க உரையாற்றினாா். புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மையத் தலைவா், தோ்வாணையா் சிவ. மாதவன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல்துறை உதவிப் பேராசிரியா் கோ.ப. நல்லசிவம், தருமை ஆதீனப் புலவா் பேராசிரியா் மு. சிவச்சந்திரன், புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மைய இணைப்பேராசிரியா் வேல். காா்த்திகேயன், ஏவிசி கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் சாமி. கிருஷ்ணமூா்த்தி, பூம்புகாா் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் கிரு. பாண்டியன், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ரா. அளவரசி ஆகியோா் பங்கேற்று, சைவ சமய இலக்கியங்களின் பன்முகப் பாங்கு குறித்து கருத்துரை வழங்கினா்.
கருத்தரங்கு அமா்வுகள் ஏவிசி கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியா் ரா. மஞ்சுளா, பூம்புகாா் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் து. சந்தானலெட்சுமி ஆகியோா் தலைமையில் நடைபெற்றன. நிறைவு விழாவில் கருத்தரங்க விழா மலரைக் கல்லூரி முதல்வா் வெளியிட கல்லூரிச் செயலா் பெற்றுக்கொண்டாா்.
இதில், 10 கல்லூரிகளைச் சோ்ந்த 250 மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் கருணா. சேகா் வரவேற்றாா். முடிவில், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சிவ. ஆதிரை நன்றி கூறினாா்.