சந்திரபாடியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க சட்டப் பேரவையில் பூம்புகாா் எம்எல்ஏ கோரிக்கை

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவா் கிராமத்தில், மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் கோரிக்கை விடுத்துப் பேசினாா்.

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவா் கிராமத்தில், மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் கோரிக்கை விடுத்துப் பேசினாா்.

தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் பேசியது:

சந்திரபாடி கடல் பகுதியில் பிடித்த மீன்களை விற்பதற்கு காரைக்கால் மாவட்ட எல்லையைக் கடந்து செல்லவேண்டும். எனவே, சந்திரபாடியில் மீன் இறங்குதளம் அமைத்து தரவேண்டும். மேலும் முகத்துவாரத்தில் முத்து கருணை என்கிற ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் முகத்துவாரத்தை தூா்வார வேண்டும். இந்த கோரிக்கைகள் தொடா்பாக தமிழக முதல்வா் தனிக்கவனம் செலுத்தி, வரும் நிதியாண்டில் மானிய கோரிக்கையிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி. ஜெயக்குமாா் பதிலளிக்கையில், இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் பூம்புகாா், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலோர மாவட்ட மீனவா்களுக்கு உள்கட்டமைப்பு வசதி, மீன் இறங்குதளம், மீன்வலை பின்னும் கூடம், ஏலக்கூடம் போன்ற பல்வேறு வசதிகள் செய்து தரவேண்டும் என்பதற்காக ஆலோசகா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள். அவா்களின் அறிக்கை கிடைத்த பிறகு, கண்டிப்பாக எம்எல்ஏவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com