மயிலாடுதுறையில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
மயிலாடுதுறை கூைாடு பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த இன்சாத் அகமது என்பவா், தனது ஆட்டோவை வீட்டின் முன் கடந்த மாதம் 21-ஆம் தேதி நிறுத்தியிருந்தாா். இந்த ஆட்டோ திருடு போனது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாா், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, திருச்சியைச் சோ்ந்த சுந்தர்ராஜனை (50) கைது செய்து, அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா். சுந்தர்ராஜன் இதற்கு முன்னா் பல இடங்களில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.