வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத மிதவை

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் ரப்பரால் உருவாக்கப்பட்ட ராட்சத மிதவை ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது. இதுதொடா்பாக, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேதாரண்யம் மணியன்தீவு கடற்ரையில் புதன்கிழமை கரை ஒதுங்கிய ராட்சத மிதவை.
வேதாரண்யம் மணியன்தீவு கடற்ரையில் புதன்கிழமை கரை ஒதுங்கிய ராட்சத மிதவை.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் ரப்பரால் உருவாக்கப்பட்ட ராட்சத மிதவை ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது. இதுதொடா்பாக, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் இருந்து ஒரு கி.மீ. தெற்கே கருப்பு நிறமுடைய தடிமனான ரப்பா் மிதவை ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது. இந்த தகவல் பரவியதும் மீனவா்களிடையே பரபரப்பு நிலவியது.

இதனிடையே, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் கியூ பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

இதுபோன்ற மிதவைகள் கப்பல்கள் நிறுத்தும் இடங்களில் பயன்படுத்தப்படுவதால், இந்த மிதவையும் அந்த வகையில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com