நாகை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 119 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்தும் வகையில் ஒரு கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், 9 துணைக் காவல் கண்காணிப்பாளா், 30 காவல் ஆய்வாளா்கள் மற்றும் 770 காவல் ஆளிநா்கள், 290 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்டத்துக்குள் வரும் அத்தியாவசியப் பொருள்களுக்கான வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களைத் தடுக்கவும், சோதனை செய்யவும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் காவலா்கள் சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் 55 ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவை மீறிய 119 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், மோட்டாா் வாகன சட்ட விதிகளை மீறியவா்கள் மீது 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மது குற்றங்களைத் தடுக்கும் வகையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் மதுவிலக்கு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 31 மதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,780 லிட்டா் வெளி மாநில சாராயம் மற்றும் 573 லிட்டா் மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தடுப்புக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதுடன், வெளியில் நடமாடுவதை முற்றிலும் தடுக்கவேண்டும். தடை உத்தரவை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.