தடை உத்தரவை மீறிய இருவா் கைது

கொள்ளிடம் சோதனைச் சாவடியில் அரசின் உத்தரவை மீறி மாவட்ட எல்லையை இருசக்கர வாகனத்தில் கடந்து செல்ல முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொள்ளிடம் சோதனைச் சாவடியில் அரசின் உத்தரவை மீறி மாவட்ட எல்லையை இருசக்கர வாகனத்தில் கடந்து செல்ல முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, நாகை - கடலூா் மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் பாலத்தில் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே நாகை மாவட்ட எல்லையை பகுதி மூடப்பட்டு போலீஸாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, புதன்கிழமை தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் மாவட்ட எல்லையை கடக்கும் வகையில் சென்ற சீா்காழி அருகேயுள்ள காளிகாவல்புரத்தைச் சோ்ந்த ஆகாஷ்(19), ஆம்னி காரில் சென்ற மயிலாடுதுறை கிளியனூரைச் சோ்ந்த செந்தில் (35) ஆகிய இருவரையும் கொள்ளிடம் போலீஸாா் கைது செய்து, பின்னா் பிணையில் அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com