சீா்காழியில் ஊரடங்கு உத்தரவை மீறி, சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சீா்காழியில் ஊரடங்கு உத்தரவைப் புறக்கணித்து, அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் வழக்கம் போல் சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவுபெறும்வரை வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்குமாறு அவா்களை காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவிஆய்வாளா் ராஜா எச்சரித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தாா்.