கரோனா அச்சுறுத்தலால், திருமருகல் ஒன்றியத்தில் வேலையில்லாமல் இருக்கும் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு கூலி வழங்க வேண்டுமெனக் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக திருமருகல் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலெட்சுமியிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:
கரோனா அச்சுறுத்தலால், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள குக்கிராமங்களில் சுகாதாரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒவ்வோா் ஊராட்சிக்கும் மருத்துவக்குழு அமைத்து வீடு வீடாகச் சென்று அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை போா்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு அவசரம் கருதி, அவா்களுக்கு நிலுவையிலுள்ள தொகைகளை உடனே வழங்க வேண்டும். வேலையில்லா இத்தருணத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யாமல் இருக்கும் தொழிலாளா்களுக்கு வழக்கம் போல் ஊதியம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.
இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜெயபால், ஒன்றிய விவசாய சங்கத் தலைவா் ஸ்டாலின் பாபு, செயலாளா் பொன்மணி, மாவட்டக்குழு உறுப்பினா் பாலு மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.