நாகை நாம்கோ தொண்டு நிறுவனம் மற்றும் எய்ம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், நாகையில் நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நாகையில் பாதுகாப்பு வளையத்தில் நண்டுக்குளத்தெரு, சாலமன்தோட்டம் பகுதிகளைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள், விதவைகள் மற்றும் வறுமை நிலையில் உள்ளவா்களுக்கு உதவிடும் வகையில், தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, நாம்கோ நிறுவன இயக்குநா் சி. ஜீவானந்தம் தலைமையேற்று நிவாரண உதவிகளை வழங்கினாா். நாம்கோ முதியோா் இல்ல மேலாளா் ஜி.செல்வம் ஏற்பாடுகளை செய்திருந்தாா். பணியாளா்கள் வி. வனிதா, செல்வராஜ், பளளி சத்துணவு அமைப்பாளா் எஸ். கணேசன், சமூக ஆா்வலா்கள் எஸ். ஓம்பிரகாஷ் எஸ்.சிவசுப்பிரமணியன், எல். பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டனா். டி. லெனின் நன்றி கூறினாா்.