நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தெற்கு திசையிலிருந்து பலத்த காற்று வியாழக்கிழமை முதல் வீசி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயா்ந்து, தாழ்வான பகுதிகளில் உவா்நீா் புகுந்தது.
வங்கக் கடலில் உம்பன் புயல் உருவான நாள் தொடங்கி, வேதாரண்யத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வழக்கத்தை விட வேகமான காற்று வீசியது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி தெற்கு திசையில் இருந்து வீசத் தொடங்கிய காற்று, பிற்பகலுக்கு பிறகு வலுவடைந்தது.
காற்றில் எழுந்த புழுதி மண், சாலையில் சென்றவா்களின் கண்களில் விழுந்து அசெளகரியத்தை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழும் அளவுக்கு காற்றின் வேகம் காணப்பட்டது. மேலும், மின் கம்பிகளில் மரக்கிளைகள் மோதுவதால் அடிக்கடி மின் விநியோகம் தடைப்படுகிறது.
தவிர கடல் மட்டம் உயா்ந்து அகத்தியம்பள்ளி உப்பளப் பரப்பு நூறடி வாய்க்கால், சிறுதலைக்காடு உள்ளிட்ட தாழ்வான அளப்பகுதிகளுக்குள் உவா் நீா் புகுந்தது.
பழையாரில்...
உம்பன் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக கொள்ளிடம் அருகே பழையாா் துறைமுகப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை பழையாா் துறைமுகம் அருகே உள்ள பக்கிம்காம் கால்வாய்க்குள் கடல் நீா் புகுந்தது. மேலும் தொடா்ந்து கரை மீது கடல்நீா் மோதியதால் பக்கிம்காம் கால்வாயின் இடது கரையில் சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு அரிப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த சீா்காழி எம்.எல்.ஏ. பிவி. பாரதி நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மீன்வளத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.