சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் வைகாசி மாத காா்த்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இது செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் வைகாசி மாத காா்த்திகையையொட்டி, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வள்ளி, தெய்வானை உடனுறை செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபா் எஜமான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஆனால், பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.