பொது முடக்கத்தின் நடுவே தேசம் கடந்த ஒரு மனிதநேயம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பொது முக்கத்தின் நடுவே தேசம், மதங்களை கடந்து நடந்துள்ள ஒரு மனித நேயப் பணி சமூக ஆர்வலர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
பொது முடக்கத்தின் நடுவே தேசம் கடந்த ஒரு மனிதநேயம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பொது முக்கத்தின் நடுவே தேசம், மதங்களை கடந்து நடந்துள்ள ஒரு மனித நேயப் பணி சமூக ஆர்வலர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

வங்கதேசத்தின் சட்டோக்ராம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நூருல் அப்சல்-மோஹசனா பேகம் தம்பதி விவசாயம் செய்கின்றனர். இவர்களது மகன் முகமது அசன் ஆரிஃப் (9). இச்சிறுவனின் இதயத்தில் ஓட்டை இருந்தது நான்கு வயதாக இருக்கும் போது தெரியவந்தது. ஏழ்மை,பொருளாதர நெருக்கடியால் மகனின் உடல்நலப் பாதிப்பை உடனடியாக சீரமைக்க முடியவில்லை.

சிறுவனின் மாமாவான அப்துல் ரஹீம் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த வேதாரண்யம், வள்ளியம்மை சாலை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரிடம் (36) இது குறித்து தெரிவித்துள்ளார். தனது ஊரில் உள்ள மருத்துவரிடம் இது குறித்து பேசலாம் என யோசித்துள்ளார் ராசசேகர், இந்த நிலையில், மார்ச் மாதத்தில் விடுமுறையில் ஊர் திரும்பிய ராசசேகர், சிறுவனை அழைத்து வர கோரியுள்ளார்.

இதையடுத்து, சிறுவன் ஆரிஃப், தாய் மோஹசனா பேகம், தாய்மாமா அப்துல் ரஹீம் ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் வேதாரண்யம் ராசசேகர் வீட்டுக்கு வந்தனர். வேதாரண்யத்தை அடுத்த செம்போடைையில் செயல்படும் நேதாாஜி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் வி.ஜி.சுப்பிரமணியனிடம் சிறுவனை அழைத்துச் சென்றனர். இதனை சரிசெய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில், கோவை கே.ஜி.மருத்துவமனைக்கு சென்று உரிய அறுவைசிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான செலவினை தோப்புத்துதுறையைச் சேர்ந்த தொழிலதிபர் சுல்தானுல் ஆரிஃப்பா ஏற்றுக் கொண்டார். இதேபோல நாகை தொழிலதிபர் எஸ்.எம்.பி.எஸ்.அகமது மைதீன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் உதவினர். ஆனால், கரோனா தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிபிக்கப்பட்டதால் சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டது. இதனால், சிறுவனுடன் அவனது தாய், மாமா மூவரும் வேதாரண்யத்தில் உள்ள ராசசேகர் வீட்டில் தங்கியிருந்தனர். இதையடுத்து, சிறுவனுக்கு கோவையில் ஆரிஃப்புக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமடைந்தான்.

தற்போது, வேதாரண்யத்தில் தங்கியுள்ள இவர்கள் விரைவில் தாயகம் செல்லவுள்ளனர். வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு சுமார் 45 நாள்கள் உணவு அளித்து, தங்க இடமளித்து  உதவியதோடு, அந்த குடும்பத்தினர் நோம்பு கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளையும் ராசசேகர் குடும்பத்தினர் செய்து கொடுத்தனர். மருத்துவ செலவினை ஏற்றுக் கொண்ட தொழிலதிபர் ஆரிஃப்பா, அகமது மைதீன் உள்ளிட்டோருக்க வங்கதேசத்து குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு, இந்து, இஸ்லாம் என்ற மத பாகுபாடு இல்லாமல் தேசம் கடந்து நடந்துள்ள இந்த மனித நேயப்பணி சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. ஓசைப்படாமல் நடந்துள்ள இந்த பணியில் ராச சேகர் குடும்பத்தினரை பலரும் பாராட்டியும், சிறுவனை நலம் விசாரித்தும் வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com