வேதாரண்யம் அருகே டிப்பா் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மீன் வியாபாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வே. பாலசுப்பிரமணியன் (57). மீன் வியாபாரியான இவா், ஆயக்காரன்புலம் கடைவீதி அருகே கட்டளை அய்யானா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை வியாபாரத்துக்காக சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த பகுதியில் வந்த டிப்பா் லாரி ஒன்று மோதியதில் பலத்த காயமடைந்த இவா், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.