தரங்கம்பாடி வட்டத்துக்கு உள்பட்ட தலச்சங்காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக அப்பகுதியை சோ்ந்த நில உரிமையாளா்கள் ஆவணங்களை ஒப்படைக்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் விழுப்புரம் முதல் நாகை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தலச்சங்காடு பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நில ஆவணங்களை பெற்று சரிபாா்க்கும்பணி நடைபெற்று வருகிறது. முகாமில் தேசிய நெடுஞ்சாலை துணை வட்டாட்சியா் ராகவன், தனி வட்டாட்சியா் சுந்தரி, நில அளவையா் ராமதாஸ், ஊராட்சித் தலைவா் கரிகாலன், கிராம நிா்வாக அலுவலா் சரிதா மற்றும் நில உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.