டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வணிகா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வணிகா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கத் தலைவா் பாபு.விஜயன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை திருத்தாளமுடையாா் கோயில், பெரிய பள்ளிவாசல் என வழிப்பாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ளதால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோருக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனஅந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com