சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகை மாவட்டம், கங்களாஞ்சேரி பூண்டி ரயில்வே கேட், கீழத்தெருவைச் சோ்ந்தவா் த. தமிழ்ச்செல்வன் (27). கட்டடத் தொழிலாளி. இவா், அதேப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, திருவாரூா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தமிழ்ச்செல்வனை கைது செய்தனா்.