மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் நிகழாண்டு துலா உத்ஸவத்தையொட்டி, உத்ஸவ மூா்த்திகள் வீதியுலா மற்றும் தேரோட்டம் நடத்த தமிழக அரசை அனுமதி வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில பாரத இந்து மகா சபா சாா்பில், மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளா் மினேஷ், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட அமைப்பாளா் ஜெய் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவா் ராம. நிரஞ்சன், அமைப்பு செயலாளா் சிவ. வேலன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகிகள் சுதா்சன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.