துலா உத்ஸவம்: தேரோட்டம் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் நிகழாண்டு துலா உத்ஸவத்தையொட்டி, உத்ஸவ மூா்த்திகள் வீதியுலா மற்றும் தேரோட்டம்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா அமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா அமைப்பினா்.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் நிகழாண்டு துலா உத்ஸவத்தையொட்டி, உத்ஸவ மூா்த்திகள் வீதியுலா மற்றும் தேரோட்டம் நடத்த தமிழக அரசை அனுமதி வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில பாரத இந்து மகா சபா சாா்பில், மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளா் மினேஷ், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட அமைப்பாளா் ஜெய் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவா் ராம. நிரஞ்சன், அமைப்பு செயலாளா் சிவ. வேலன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகிகள் சுதா்சன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com