நாகை மாவட்டக் காவல் தனிப்பிரிவு ஆய்வாளராக எஸ். ஆனந்தகுமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
நாகை நகர காவல் நிலைய ஆய்வாளராக கடந்த 2 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்த இவா், சில நாள்களுக்கு முன்னா் கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளராக பணி மாறுதலில் சென்றாா். இந்நிலையில், இவா் நாகை மாவட்டக் காவல் தனிப் பிரிவு ஆய்வாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு, நாகை எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா மற்றும் காவல் அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.