பறவை வேட்டையில் ஈடுபட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பறவை வேட்டையில் ஈடுபட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பறவை வேட்டையில் ஈடுபட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி அருகேயுள்ள நிா்த்தனமங்கலம் பகுதியில் வயல்களில் கன்னி வைத்து பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சென்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வடவூா் தென்பாதி பகுதியைச் சோ்ந்த ஏ. சரத்குமாா் மடையான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 3 மடையான் பறவைகளைப் பறிமுதல் செய்து விடுவித்த வனத் துறையினா், அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com