நாகை மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 7,110 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 25 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,136- ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்த 70 வயது முதியவரின் இறப்பு வியாழக்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 123-ஆக உயா்ந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 62 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 6,683 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 330- ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com