மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தொடக்க விழா அண்ணா பல்கலைக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் செயலா் கே. காா்த்திகேயன் விழாவுக்கு தலைமை வகித்து, கடின உழைப்புக்கு நிகரானது எதுவும் இல்லை என்று பேசினாா். கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) எம். செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா் வி.தமிழ்ச்செல்வன், கல்லூரி துணை முதல்வா் எஸ். செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோா் இணையதளம் வழியாக பங்கேற்றனா். விழாவில், சிறப்பு விருந்தினராக ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் தலைவா் என். விஜயரங்கன் பங்கேற்று கல்லூரியின் சிறப்பம்சங்களையும், கல்லூரியில் பயின்ற மாணவா்கள் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் நல்ல பணிகளில் பணியாற்றி வருவது குறித்தும் பேசினாா்.