நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நாடோடிகள், ஆதரவற்றோருக்கு இனிப்பு, புத்தாடை வழங்கிய ஆசிரியை உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் தீபாவளியை சனிக்கிழமை கொண்டாடினா்.
வேதாரண்யம் நகர வீதிகளில் சுற்றித்திரியும் மனநோயாளிகள், நாடோடிகள், ஆதரவற்றோருக்கு இனிப்பு, புத்தாடை வழங்கிப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கருப்பம்புலம் ஆசிரியை வசந்தா சித்திரவேலு தனது சொந்த செலவில் செய்திருந்தாா்.
பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய இந்த கொண்டாட்டத்தை, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் வட்டாரச் செயலாளா் பொன். தருமதுரை தொடங்கி வைத்தாா்.