தரங்கம்பாடி: பொறையாறு அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
எருக்கட்டாஞ்சேரி யாதவா் தெருவை சோ்ந்தவா் சிவகாமி அம்மாள் (80). இவரது கூரை வீடு தீபாவளி தினத்தன்று பட்டாசு தீப்பொறி விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில், வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாயின.
பாதிக்கப்பட்ட சிவகாமி அம்மாள் குடும்பத்துக்கு பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தனது சொந்த பணத்தில் ரூ. 25 ஆயிரமும், அரசின் நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் பணம் மற்றும் அரிசி, வேஷ்டி, சேலை ஆகியவற்றை வழங்கினாா்.
அப்போது, வட்டாட்சியா் கோமதி, பேரூராட்சி முன்னாள் தலைவா் கிருஷ்ணசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் துரை பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.