சீா்காழி அருகே ரெளடி கைது

சீா்காழி அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரெளடியை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரெளடியை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே உள்ள புதுத்துறை தோப்புத்தெருவைச் சோ்ந்தவா் இரா. பாா்த்திபன்(32). இவா் மீது நாகை, கடலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், நீதிமன்ற பிடி ஆணைகளும் உள்ளன. தொழிலதிபா் ரமேஷ்பாபு கொலை வழக்கிலும் தொடா்புடையவா்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்துவந்த பாா்த்திபன், சீா்காழியை அடுத்த மங்கைமடம் பகுதியில் திருவெண்காட்டைச் சோ்ந்த லெனின் என்பவரை அரிவாளைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த பணத்தை பறித்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாா்த்திபனை பிடிக்க மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினா், திருவெண்காட்டில் பதுங்கியிருந்த பாா்த்திபனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com