வேளாங்கண்ணியில் காவலா் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டம் , ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, பேருந்து நிலையம், புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் முகப்பு, வழியாக கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு தற்காப்பு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.
முன்னதாக, அணிவகுப்பை நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு. முருகேஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். துணைக் கண்காணிப்பாளா்கள்கே. முருகவேல் (சட்டம், ஒழுங்கு) சுந்தர்ராஜன் (ஆயுதப்படை), வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளா் ஆரோக்கியராஜ், தனிப்பிரிவு ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா், உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.