தாமதமாக தொடங்கிய வடகிழக்குப் பருவமழை: கோடியக்கரைக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை தொடக்கம்

கோடியக்கரை சரணாலயப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக வலசை வரும் பறவைகளின் வருகை இங்கு தொடங்கியுள்ளது.
கோடியக்கரை சரணாலயப் பகுதியில் காணப்படும் கடல் ஆலாக்கள்.
கோடியக்கரை சரணாலயப் பகுதியில் காணப்படும் கடல் ஆலாக்கள்.

கோடியக்கரை சரணாலயப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக வலசை வரும் பறவைகளின் வருகை இங்கு தொடங்கியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக்காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.

இந்த சரணாலயப் பகுதிக்கு சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 247 பறவை இனங்கள் வந்து செல்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழையளவு குறைந்தது, உணவு (இரை) தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் பறவைகளின் வருகை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் தொடங்கும் இந்த பருவக்காலம் ஜனவரி மாதம் வரையில் தொடரும். நிகழாண்டு இப்பகுதியில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், பறவைகள் வருகை இல்லாமல் சரணாலயம் களையிழந்த நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பறவைகள் வருகையும் தொடங்கியுள்ளது.

இந்த சரணாலயத்தில் சிறப்பு பெற்றதாகக் கருதப்படும் பூநாரைகள் மற்றும் கூழக்கிடா, செங்கால் நாரை போன்ற பறவை இனங்கள் பெயரளவில் மட்டுமே காணப்படுகின்றன. அதேநேரத்தில், கடல் காகம், மெலிந்த மூக்கு கடல் ஆலாக்கள், சிறவி போன்ற பல இனப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. இவை தற்போது, கோடியக்கரை, கோவைத்தீவு, நெடுந்தீவு, சிறுதலைக்காடு போன்ற இடங்களில் காண முடிகிறது.

இதுகுறித்து மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இணை இயக்குநா் டாக்டா் எஸ். பாலச்சந்திரன் கூறியது:

ஆா்ட்டிக் பகுதியில் இருந்து குளிா்காலத்தில் வலசை வரும் உள்ளான் என அழைக்கப்படும் கரையோரப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன. நீள கால் உள்ளான், மிகவும் குறைந்த எடையுள்ள கொசு உள்ளான், மண்டை உள்ளான் வகைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன.

வழக்கமாக அதிக எண்ணிக்கையில் காணப்படும் பறவைகள் தவிர, 11 ஆயிரம் கிலோ மீட்டா் தொடா்ந்து பறக்கும் திறனுடைய கண்ணாடி மூக்கு உள்ளான், நிகழாண்டு நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வந்துள்ளன. இவை பருவம் முடிந்ததும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயரும் . அடுத்து வரும் நாள்களில் மழை அதிகரித்தால் பூநாரை போன்ற பறவைகளின் வருகையும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com