நாகூா் அருகே ஆற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு

நாகூா் அருகே ஆற்றிலிருந்து பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

நாகூா் அருகே ஆற்றிலிருந்து பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

நாகூரை அடுத்த கங்களாஞ்சேரி வெட்டாற்றில் பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நாகூா் காவல் ஆய்வாளா் ஏ. ராஜேஷ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், இறந்து கிடந்தது மேலவாஞ்சூா் மில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி மாரியம்மாள் (80) என்பதும், மனநலன் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரிய வந்தது. நாகூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com